முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்படி மனசுக்குள் வந்தாய்: திரை விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஆக.17 - துணி வெளுக்கும் தொழில் செய்பவரின் மகன் நாயகன் விஷ்வா. இவர் பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்க வருகிறார் பணக்கார வீட்டு பெண் மித்ரா. இவரின் அழகில் மயங்கி மித்ராவை காதலிக்கிறார் விஷ்வா. இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு இடையூறாக இருக்கிறார் மித்ராவின் நண்பர் ஷாம். இவரை கொலை செய்து ஷாம் வீட்டிலேயே பிணத்தை புதைக்கிறார் விஷ்வா. கொலை சம்பவம் மர்மமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணையில் இறங்குகிறது. இதில் விஷ்வா சிக்கினாரா இல்லை காதலியுடன் ஒன்று சேர்ந்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

காதலிக்காக உருகுவது, ஆக்ரோஷமான இடங்களில் மோதுவது, கொலை செய்து விட்டு செய்யாதது போல வெள்ளந்தியாக இருப்பது என பல இடங்களில் நாயகன் சபாஷ் வாங்குகிறார். நாயகி மித்ரா கவர்ச்சியான அழகு. தனக்கு கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ரவிகாளை துருவி துருவி விசாரிக்கும் போது எங்கே குற்றவாளியான விஷ்வா சிக்கி விடுவாரோ என்கிற தவிப்பு ஏற்படாமல் இல்லை. இவர்களுடன் சதீஷ், மகி, மகேந்திரன் என அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டம் டேனியல் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசனை, எடிட்டிங் வி.டி.விஜயன் விறுவிறுப்பை தருகிறது. கதை, திரைக்கதை, இயக்கம் பி.வி.பிரசாத் சில இடங்களில் இருந்தாலும் மனம் கவர்ந்திருக்கிறது எப்படி மனசுக்குள் வந்தாய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்