முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுபேருந்து விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 19 - அரசு பேருந்து விபத்தில் பலியான திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியையும், இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு நிதியுதவியையும் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யார் வட்டம், கொடையம்பாக்கம் கிராமம், மோரணம் அப்துல்லாபுரம் சாலையில் 12.8.2012 அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அரசு பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த, கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த  சின்னக்குழந்தை என்பவரின் மகன் முனியாண்டி மற்றும் அருணாச்சலம் என்பவரின் மகன்  மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டை, படவல்கால்வாய் கிராமத்தில் 13.8.2012 அன்று  ஈரோடிலிருந்து  கிருஷ்ணகிரிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த குப்பாண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மனைவி  ராஜம்மாள்,  சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், செளரிமா நகரைச் சேர்ந்த  கங்காதரன் என்பவரின் மனைவி பத்மாவதி மற்றும் செட்டியூரைச் சேர்ந்த மாது என்பவரின் மனைவி வசந்தா ஆகியோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், மேல்மதுரை கிராமத்தில் 14.8.2012 அன்று செங்கோட்டையிலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  எதிரே வந்த வேன் மீது மோதியதில், வேனில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தைச் சேர்ந்த  கருப்பு என்பவரின் மகன் பெரியசாமி மற்றும் அந்தோணிராஜ் என்பவரின் மகன் ஜேம்ஸ்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்   அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.  இந்த  சாலை விபத்துகளில்  அகால மரணமடைந்தவர்களின்குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டை, படவல்கால்வாய் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில்  13  நபர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;   மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், மேல்மதுரை கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 14 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க  மருத்துவமனை அதிகாரிகளுக்கும்,  ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகங்களுக்கும்  நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும்,  இவர்கள் அனைவரும் விரைவில் nullரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு  லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/​ ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/​ ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்