எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஆக.- 19 - கிர”னைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று போலீசில் சரண் அடைந்தார். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை மாவட்டத்தில் உள்ள கிர”னைட் குவாரிகளை 18 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தார். அவரும் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால் புறம்போக்குகள் உள்ளிட்ட பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களை தனியார் கிரானைட் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குழுவினர் கடந்த 2ம் தேதி முதல் கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு விதி மீறல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்கள் மற்றும் கிரானைட் அதிபர்கள் மீது 13 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர கிரானைட் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரானைட் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தி அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிஆர்பி நிறுவனத்தின் மூலம் இயங்கி வந்த 2 பஸ்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அந்த 2 பஸ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள் மற்றும் பல வாகனங்களின் உரிமங்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிஆர்பி நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி, அவரது மகன்கள் மற்றும் சிந்து கிரானைட் அதிபர் பி.கே.செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் நாகராஜ், மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 13 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு, வருகிற 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் பிஆர்பி கிர”னைட் நிறுவனத்தின் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று மதியம் 12.50 மணியளவில் வழக்கறிஞர்கள் பால்கனகராஜ், பீட்டர் ரமேஷ், சங்கரநாராயணன் ஆகியோருடன் ஒரு காரில் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தார். பின்னர் காரைவிட்டு இறங்கி தனது வழக்கறிஞர்கள் புடை சூழ சூப்பிரெண்டு அலுவலகத்திற்குள பி.பழனிச்சாமி சென்றார். அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி மயில்வாகனனிடம் மனுவை கொடுத்து போலீசில் சரண் அடைந்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் வெளியே சென்றிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பி.பழனிச்சாமி போலீஸ் எஸ்பியிடம் மனு ஒன்று கொடுத்தார். தான் போலீசில் சரண் அடைவதாக தெரிவித்தார். பின்னர் போலீசில் சரண் அடைந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியிடம் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பகல் 1.30 மணியளவில் பி.பழனிச்சாமியை போலீசார் வேனில் ஏற்றி சென்று வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி போலீஸ் எஸ்பி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கிரானைட் முறைகேடுகள் சம்பந்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டுவந்த பி.பழனிச்சாமி இன்று (நேற்று) சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சரண் அடைந்தவரிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்த போலீசாருக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடங்கிய ஒரு குழுவை அமைத்து இந்த விசாரணை நடத்தப்படும். சுப்ரீம் கோர்ட் வழங்கிய விதிமுறையின் படி வழக்கறிஞர்கள் பி.பழனிச்சாமியை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். பி.பழனிச்சாமியை எங்கே வைத்து விச”ரணை நடத்த உள்ளோம் என்பது பற்றி தெரிவிக்க இயலாது என்றார்.
ா
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.