முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்பு- சகோதரத்துவம்- மதநல்லிணக்கம் பெருகட்டும் ரோசய்யா ரம்ஜான்வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.-20 - ரம்ஜான் திருநாளையொட்டி அன்பு, சகோதரத்துவம், மதநல்லிணக்கம் பெருகட்டும் என்று தமிழக கவர்னர் ரோசய்யா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.. இது தொடர்பாக தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குரானில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை பின்பற்றி  உண்மையான மற்றும் நெறி உள்ள வாழ்க்கை வாழ நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும். ரம்ஜான் திருநாள் நம்மிடையே பகிர்வையும், கொடுத்தலையும் வளர்த்து அன்பு, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்தை பெருகச் செய்ய வேண்டும்.இவ்வாறு கவர்னர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்