முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் - சென்னையில் 5 ஆயிரம் மசூதிகளில் தொழுகை

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.21 - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, பெருநாள் உரை நிகழ்த்தினார். இதேபோல் சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ஈகை பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளி வாசல், மண்ணடி ஈத்கா உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்