முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., ராணுவம் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு,ஆக.21 - ரம்ஜான் பண்டிகையான நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ காவல் நிலையங்களை நோக்கி சரமாரியாக இயந்திர துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதனையொட்டி நேற்று ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை நெடுகிலும் இருநாட்டு ராணுவத்தினர்களுக்கும் நீண்ட நேரம் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவ செய்வதற்காக அடிக்கடி போர்நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய ராணுவ காவல் நிலையங்கள் மீது துப்பாக்கியால் சுடுவது அப்போது இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கும் இருதரப்பினருக்கும் சண்டை நடக்கும்போது இந்திய ராணுவத்தினர் கவனம் திசை திரும்பும். அதை பார்த்து தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி விடுவார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுவரை 14 தடவைகள் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை, எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் உள்ள மாலபெலா, கார்ஹல், சித்ரா கேம்ப், நாகா நம்பர் 10 மற்றும் அஹ்நூர் பகுதி நெடுகிலும் உள்ள இந்திய ராணுவ காவல் நிலையங்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு சரியாக 10 மணி அளவில் பாகிஸ்கான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தந்திரத்தை புரிந்துகொண்ட இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததோடு தீவிரவாதிகள் யாரும் ஊடுருவாமலும் கண்காணித்துக்கொண்டனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். பல தீவிரவாதிகள் திரும்பி தப்பியோடி விட்டனர். இந்திய ராணுவத்தினருக்கு எல்லை பாதுகாப்பு படையினரும் உதவியாக இருந்தனர். நேற்றுக்காலை சரியாக 7.30 மணிவரை துப்பாக்கி சண்டை நடந்துகொண்டே இருந்தது. பூஞ்ச் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்திய காவல் நிலையங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்திய ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டை ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்