முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மடத்தில் இருந்து நித்தியானந்தா சீடர்கள் வெளியேற்றம்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.22 - மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்தியானந்தா சீடர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.  மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் நடந்த வண்ணம் உள்ளன. அனைத்து தரப்பினருமே நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து வருகிறார்கள். தொடக்கத்தில் நித்தியானந்தா மிகவும் நல்லவர், சிவபெருமானும், பார்வதி தேவியும் சொல்லிதான் நித்தியானந்தாவை நியமித்துள்ளேன் என்று கூறிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் நடவடிக்கை பிடிக்காமல் நித்தியானந்தா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். மேலும் நித்தியானந்தாவின் சீடர்கள் மதுரை ஆதீன மடத்தில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து நித்தியானந்தா மதுரை திரும்பினார். அவரை வரவேற்க ஆதீனம் செல்லவில்லை. மேலும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் நித்தியானந்தா தனியாக சென்று சாமி தரிசனம் செய்தார்.

   இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் உத்தரவுக்கு கீழ்படியாத நித்தியானந்தாவின் முக்கிய சீடர்களான ஞானகுருபானந்தா, பாண்டி செல்வம் ஆகியோர் நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். இதை  தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவிற்கும் கருத்து வேறுபாடாக இருந்தது தற்போது மோதலாக வெடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்