முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது இலங்கை மீண்டும் தாக்குதல்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

வேதாரண்யம் ஆக 22 - வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மீனவர்களை  இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மேலும் பத்து பேர் காயத்துடன் ஊர் திரும்பியுள்ளனர் இதற்கிடையில் மூன்றாவது நாளாக கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ்டுபட்டுள்ளனர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி கிராம  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கோடியக்கரை நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர் 

இந்த  சம்பவத்தில் காயமடைந்த வெள்ளப்பள்ளம்  கிராமத்தைச் சேர்ந்;த மூர்த்தி என்கிற குப்புசாமி (35) அன்புசெல்வன் (19) மகாலிங்கம் (25) முருகையன் (50), அப்புராஜ் (45) பொன்னுசாமி (45) சத்தியமூர்த்தி (37), இளையராஜா(20) ஆகிய 8 மீனவர்கள்; நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்;சைப் பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் 18-ம் தேதி வெள்ளப்பள்ளத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 70 படகுகளில் 15 படகுகள் மட்டும் 19-ம் தேதி கரை திரும்பியது. மற்ற படகுகள் தங்கி மீன் பிடித்து கொண்டிருந்தன இந்த நிலையில் அனைத்து படகுகளும் நேற்று 20-ம் தேதி இரவு கரை திரும்பியது

இதில் 19-ம் தேதி இரவு இலங்கை கடற்படையினர் வெள்ளப்பள்ளத்;;தைச் சேர்;ந்த மேலும் மூன்று படகுகளில் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் அதிலிருந்த மீனவர்களையும் தாக்கியுள்ளனர் இதில் தணிகாசலம் (32), பக்கிரிசாமி (50), காத்தவராயன் (22), சிவன்மதி (21), வீரமணி (35), வேலாயுதம் (65), செல்வம் (22), கார்த்தி (17), மற்றோரு செல்வம் (30), பாஸ்கர் (28) ஆகிய பத்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்பு பைப், இரும்பு ரோப், ரப்பர்தடி போன்றவற்றால் தாக்கினர்  மேலும்  100 கிலோ உயர் ரகமீன்கள், திசைக்காட்டும் கருவி, மற்றும் டீசல் ஆகியவற்றை கடலி;;;ல் கொட்டி அட்டுழியம் செய்து விட்டு சென்று விட்டனர் வெள்ளப்பள்ளம் மீனவர்களை இரண்டாவது நாளாகவும் இலங்;கை கடற்படையினர் தாக்கியுள்ளனர் படகில் இருந்த டீசல் முழுவதையும் இலங்கை கடற்படையினர் கடலில் கொட்டி விட்டதால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நாகை மீனவர்களிடம் டீசலைப் பெற்றுக் கொண்டு நேற்று முன்தினம்  20-ம் தேதி இரவு கரை திரும்பினர்

இந்த நிலையில் மீனவர்கள் தொடர்ந்து மீனவர்கள்  தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதுவரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்  வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த  மீனவர்கள் ஒட்டு மொத்தமாக கடலுக்கு செல்லாமல் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ்ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago