முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு அருகே விபத்தில் 3 பேர் பலி - இருவர் காயம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

வத்தலக்குண்டு, ஆக.25 - வத்தலக்குண்டு அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(28). இவர் பெங்களூர் அடுத்துள்ள ரேணிகுண்டா பகுதியில் கிரானைட் குவாரி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ரஞ்சித்குமார் ஒரு ஸ்கார்பியோ காரில் தனது மனைவி மேகலா(26), மகன் ரித்திஷ்குமார்(9), மகள் ரெக்சனா(7), தாய் புஷ்பம்(45) ஆகியோருடன் ஒரு ஸ்கார்பியோ காரில் தேவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வத்தலக்குண்டு அருகே வந்த போது எதிரே கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி இவர்கள் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கார்பியோவின் கார் கதவு பூட்டிக் கொண்டதால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த வீரர்கள் காரின் கதவை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வந்தனர். ஆனால் ரஞ்சித்குமார், மனைவி மேகலா, மகன் ரித்திஷ்குமார் ஆகிய மூவரும் காருக்குள்ளேயே பிணமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். தாய் புஷ்பம், மகள் ரெக்சனா ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் குமரேசன், சார்பு ஆய்வாளர் காமாட்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்