முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலியான சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.25 - பேருந்து மோதி பலியான சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- கரூர் மாவட்டம் மற்றும் வட்டம்,  கரூர் பேருந்து நிலையத்தில் 23.8.2012 அன்று  தோரணக்கல்பட்டி கிராமம், டி.செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் மகன்  தமிழ்மணி மீது அரசுப் பேருந்து மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில்  அகால மரணமடைந்த  தமிழ்மணியின் குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்மணியின் குடும்பத்திற்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு  லட்சம் ரூபாய்   வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.             

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்