முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் காவல் நீட்டிப்பு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

பெரம்பலூர். ஆக.25 - பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏவும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் உறவினருமான ராஜ்குமார் என்பவரது வீட்டில் பணிபுரிந்துவந்த கேரளாவைச் சேர்ந்த சந்திரன், சுசீலா என்பரவது மகளான சத்யா(15), முன்னாள் எம்.எல்.ஏவின் வீட்டில் வேலைபார்த்துவந்தபோது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தியுள்ளனர். பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜுலை 6ம்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சிறுமியின் உடலை மறுபரிசோதனை செய்த கேரள மருத்துவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததாக கொடுத்த அறிக்கையை தொடர்ந்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சத்யாவின் உறவினர் மற்றும் குடும்பத்தினர் பீர்மேடு மற்றும் பெரம்பலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரினையடுத்து, திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், சிறுமியை பாலியல் தொடர்பில் ஈடுபடுத்தியதற்காகவும், அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரையும், இதில் தொடர்புடைய புரோக்கர் அன்பழகன், கார்டிரைவர் மகேந்திரன் மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர் ஆகியோரையும் கைதுசெய்து விசாரித்தனர். 

இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு மருத்துவபரிசோதனை செய்த தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி, மற்றும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ உறவினர்கள் மற்றும் 4பேரிடமும் விசாரித்துவந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 4பேருடைய ஜாமீன் மனுவை பெரம்பலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் உள்ளிட்ட 4பேருக்குமான 15நாள் நீதிமன்றக்காவல் முடிவடைந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று காலை பெரம்பலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை ஆராய்ந்த முதன்மை குற்றவியல் நீதிபதி திலகவதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 4பேரை மேலும் 15நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டு ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து அவர்கள் 4பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்