முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜர்தாரி மீதான வழக்கு செப். 18 க்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. - 28 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பிரதமராக இருந்த கிலானி இதை நிராகத்திருந்தார். இதனால் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்குள்ளாகி பதவி விலக நேரிட்டது. கிலானியைத் தொடர்ந்து புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பொறுப்பேற்றார். ஜர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அஷ்ரப்புக்கும் சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது. ஆனாலும் அஷ்ரப் விசாரணையை நடத்த மறுத்துவிட்டார். இதனால் அவருக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் நேற்று அவர் கோர்ட்டில் ஆஜரான போது, நீதிமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் சர்தாரி மீதான வழக்கை விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் தரப்பில் கோரப்பட்டது. இதில் கோபமடைந்த நீதிபதி, சட்டத்தை மதிப்பதையெல்லாம் செயலில் காட்டுங்கள் என்று கூறி வழக்கை செப்டம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார். இதனால் கிலானி வழியில் பறிபோகவிருந்த அஷ்ரப்பின் பதவி சிறிது காலம் தப்பியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்