முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் நிறுவன மேலாளர் கைது

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மேலூர், ஆக. 31 -  கிரானைட் கடத்தல் தொடர் பாக, தனியார் நிறுவன மே லாளரை கீழவளவு போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு - மேலூர் அருகே உள்ள கீழவளவு காவல் நிலையத்தைச் சேர்ந்தது  ரெங்கசாமிபுரம். இந்தப் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கிரானைட் கற்கலை சிலர் கடத்தி உள்ளனர். 

இந்த கிரானைட் கடத்தல் தொடர்பாக வி.ஏ.ஓ. அக்பர்சே ட் கீழவளவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்தப் பிரச்சினை தொடர் பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நட த்தி வருகின்றனர். 

தற்போது இது தொடர்பாக சிந்து கிரானைட் மேலாள ரான கீழையூரைச் சேர்ந்த பிரபுவை(வயது 45) போலீ சார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்