முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் கேள்விக்கு என்ன பதில்? கருணாநிதியிடம் கேட்கும் விஜயகாந்த்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

பேராவூரணி,ஏப்.- 7 - கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய எந்த கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதில் சொல்லியதே இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பெரியார் சிலை அருகே அத்தொகுதி வேட்பாளர் நடிகர் அருண்பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் என்னை விலைக்கு வாங்க சன் டி.வியும், மு.க. அழகிரியும் முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. விஜயகாந்த் கோபக்காரன்தான். அந்த கோபம் பிள்ளைகளை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றதுதான்.அதை பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. 

கடந்த 5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் கருணாநிதி பதில் சொல்லியதே இல்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக அவர் பதில் சொல்ல வேண்டும். இலங்கையில் தமிழினத்தையே காட்டிக் கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்