முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் நீதித்துறைக்கு மிகுந்த உறுதுணையாக இருப்பவர்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.9 - உயர்நீதிமன்ற 150-வது நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஒய்.இக்பால் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் என் வணக்கம். விழாவிற்கு வந்த குடியரசு தலைவர், கவர்னர் மற்றும் தமிழகத்தின் மூன்றாவது முதல்வர், நீதித்துறைக்கு மிகுந்த உறுதுணையாக இன்றளவிலும் இருந்து வரும் தமிழக முதல்வரே. 150-வது கால வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றத்தில் இப்பொழுது நான் தலைமை நீதிபதியாக இருப்பதை எண்ணி பெருமையடைகிறேன்.

சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் மிக விரைவில் முடித்து தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க உயர்நீதிமன்றத்தில் வரலாற்றை அறிந்து, வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், ஊழியர்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்