முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப். - 10 - மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதி சகியுர் ரஹ்மான் லக்வி உட்பட 7 பேர் மீது பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி சிறையில் வழக்கு விசாரணை நடக்கிறது. கடந்த சனிக்கிழமை நடந்த விசாரணையின் போது மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் 4 பேர் வெளிநாடு சென்று விட்டதால் அவர்கள் ஆஜராகி அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி சவுத்ரி ஹபிபுர் ரஹ்மான் விசாரணையை செப்டம்பர் 15 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பாகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை பாகிஸ்தான் நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறும் போது, மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள 2 வது நீதிக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. தாக்குதல் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 பேர் மீதான விசாரணையை துரிதப்படுத்தும் நோக்கில் அனுப்பப்படும் இக்குழுவை இந்தியா அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம். வழக்கு விசாரணை மந்தமாக நடப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது மந்தமான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறை என்றார் ரஹ்மான் மாலிக்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்