முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீலம்நதியில் வெள்ளப்பெருக்கு: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லஉத்தரவு

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப்.- 11 - ஜீலம் நதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  உள்ளதால்  ஸ்ரீநகரில்  அந்த நதிக்கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக  கடுமையான மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக அந்த நகரின் குறுக்கே ஓடும் ஜீலம் நதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நதியில்  வெள்ளம் அபாய அளவை  தாண்டி ஓடுவதால்  இந்த நதியின் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  அதிகாரிகள்  உத்தரவிட்டுள்ளனர்.  ராம் முன்ஷி பாக் பகுதியில் வெள்ளம் 10 அடிக்கும் மேல்  ஓடுகிறது. அதனால்  அந்த நதியின் கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்  அரசு அதிகாரிகள்  மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக  ஸ்ரீநகரில்  போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  மக்களின்  அன்றாட வாழ்க்கையும்  ஓரளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago