முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் நவம்பரில் பாக். பயணம்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத், செப். - 11 - பிரதமர் மன்மோகன்சிங் நவம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று அங்குள்ள நா ன்கானா குருத்துவாராவில் பிரார்த்த னை செய்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - சீக்கிய மதகுரு குருநானக் பிறந்த இடம் நான்கானா சாகிப். இந்த ஊர் பாகிஸ் தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. வரும் நவம்பர் மாதம் 28 -ம் தேதி பா கிஸ்தான் செல்லும் பிரதமர் மன்மோ கன் சிங் நானா சாகிப் சென்று அங்கு வழிபாடு செய்ய இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவ தாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் இஸ்லாமா பாத்தில் நடந்து வருகிறது. இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களான எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் ஹினா ரபானிகர் இருவரும் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஹினா வெளியிட்ட அறிக்கையில், இந்திய பிரதமர் மன் மோகன் சிங் இந்த ஆண்டு கடைசியில் பாகிஸ்தான் வருவார் என்று எதிர்பார் க்கிறோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் பிரதமரின் பாக். பயணம் குறித்த தகவலை பாகிஸ்தான் அதிகாரி கள் வெளியிட்டு உள்ளனர். பிரதமர்மன்மோகன் சிங் பிறந்த ஊர் கா என்ற கிராமம். இதுவும் பாகிஸ்தா னில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தான் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்