எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,செப். - 11 - கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நேற்று 2வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வந்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் இருந்து பேரணியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, பெருமணல், கூத்தங்குளி, தாமஸ் மண்டபம் ஆகிய பகுதிகளில் அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகிய போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜு, நெல்லை எஸ்.பி.விஜயேந்திரபிதரி ஆகியோர் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் தடையை மீறி பேணியாக வருபவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதற்காக போராட்டக்காரர்கள் வர முடிவு செய்திருந்த வைராவி கிணறு மற்றும் தாமஸ்மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் கலவர தடுப்பு வாகனங்களுடன் தயாராக நின்றனர். ஆனால் போராட்டக்காரர்களோ, முதலில் திட்டமிட்டப்படி சாலை வழியாக வராமல் இடிந்தகரை கடற்கரை வழியாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை நோக்கி பேரணியாக 3 கி.மீ. நடந்தே சென்றனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீசார் கடற்கரையிலே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவே உள்ள கடற்கரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு கடற்கரையிலேயே தங்கினர். போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்லாத வகையில் போலீசாரும் அவர்களுக்கு முன்பு அமர்ந்தபடி இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் போராட்டக்காரர்கள் நேற்று காலை அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் தென் மண்டல ஐ.ஜி.ராஜேஷ்தாஸ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். பேச்சுவார்த்தையின் போது ஐ.ஜி. பேசுகையில், உங்களின் மீது அரசுக்கு அதிக அக்கறை உள்ளது. ஆகவே அரசு கூறும் கருத்துக்களை கேளுங்கள். அரசும் மாவட்ட நிர்வாகமும் உங்களுடன் தோழமையுடன் செயல்படும். ஆகவே போராட்டத்தை கைவிடுங்கள் உங்களுக்கு 10 நிமிடம் கால அவகாசம் தருகிறேன் என்றார். ஆனால் அதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது போலீஸ் அதிகாரிகள் நின்ற பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் அதிகாரி ஒருவரை திடீரென்று தள்ளினர். போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்கள், கட்டைகள் மற்றும் செருப்பை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.ஜி.ராஜேஷ்தாசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது பாதுகாவலர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போலீசார் மீது மணலை அள்ளி வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரை கலைத்தனர். பின்னர் போலீசாரிடமிருந்து தப்பிக்க போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஏராளமானோர் கடலுக்குள் பல அடி தூரத்துக்கு ஓடி சென்றனர். அவர்களை அதிரடிப்படை போலீசார் கடலுக்குள் சென்று மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீசார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உவரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீசாரை போராட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று அவர்களை மீட்டு வந்தனர். இதற்கிடையில் போராட்டக்காரர்கள் போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கிருந்த பொருட்களை சாலையில் போட்டு தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி, தாமஸ்மண்டபம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.