முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுகவிற்கு வாக்களித்தால்தான் தடையின்றி மின்சாரம் கிடைக்கும்-கிருஷ்ணசாமி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராஜபாளையம், ஏப்ரல் - 7 - ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் கோபால்சாமி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களுக்கு சேவை செய்யும் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழக மக்களின் வாழ்வில் வளமும், தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்று வருகின்ற ஆட்சி நமது ஆட்சியே என பேசினார். அப்போது மாணவர்களுக்கு இலவச லேப் டாப் கிடைத்திடவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் கோபால்சாமியையும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமாருக்கு அமோக ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.  நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் விநாயகமூர்த்தி ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, புதிய தமிழகம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாலிங்கம், மாவட்ட செயலாளர் காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

ராஜபாளையம் வந்த கிருஷ்ணசாமிக்கு ஆசிலாபுரம், முறம்பு,முதுகுடி, கிருஷ்ணாபுரம் உட்பட பல இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்