முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல்விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

மும்பை, செப். - 16 - டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று அதிகரித்திருக்கிறது. இது கடந்த இரண்டரை மாதத்தில் முதல் முறை ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பாகும். நேற்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 54.72 ஆக இருந்தது. பிற்பகலில் ரூ 54.68 ஆகவும் வர்த்தக முடிவின் போது 55.43 ஆகவும் இருந்தது. டீசல் விலை உயர்வுக்கே ரூபாய் மதிப்பு அதிகரித்து விட்ட நிலையில் இந்தியா அதிரடியாக மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சமான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியால் ரூபாய் மதிப்பு இன்னமும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தவாரத்தில் அனேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 53 முதல் ரூ 55 வரை இருக்க சாத்தியம் உள்ளது என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்