முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய எடியூரப்பா போர்க்கொடி

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

ஹவேரி, செப். 20 - பா.ஜ.க.வை பலப்படுத்த கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹவேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

ஜாதி மற்றும் பண பலத்தால் சிலர் அரசியல் செய்து வருகின்றனர் என்று அண்மையில் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். சிறந்த அரசியல்வாதியான அவர் விதிகளை மீறி ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகித்து வருகிறார். பா.ஜ.க..வை பலப்படுத்த துணை முதல்வர் பதவியையும், வருவாய்த் துறை அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். பதவியை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முடியாதவர்கள் என் மீது குற்றம் சாட்டுவதில் குறியாக உள்ளனர். பா.ஜ.க.வில் இருந்து நான் விலகுவதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். நான் கட்சியில் இருந்து விலக மாட்டேன். ஆனால் எனது சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுமானால் அடுத்த நிமிடமே கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்