முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கசாபின் கருணை மனுவை நிராகரிக்க சிவசேனா வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப். 20 - பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதிக்கு அவரது சார்பில் கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் நீலம் கோர்ஹேர் வலியுறுத்தி உள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சி பிரணாப்பை ஆதரித்ததால் இந்த கோரிக்கையை பிரணாப் ஏற்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அது போன்ற விஷயம் அல்ல இது என்று குறிப்பிட்டார். இதனிடையே அக்கட்சி தலைவர் பால் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மீது காங்கிரஸ் என்ற போர்வையில் ஏற்பட்டுள்ள ஆபத்தில் இருந்து நாட்டு மக்களை விநாயகர் மீட்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்