எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 8 - தி.மு.க. விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் எம்.பி. முத்துமணி கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. சார்பாக பொதிகை டி.வி. யில் முத்துமணி பேசியதாவது, வரும் 13ம் தேதியன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தொலைக்காட்சியில் பேச எமக்கு வாய்ப்பு அளித்த தொலைக்காட்சி நிலையத்தாருக்கும், எமது கருத்துக்களை காது கொடுத்துக் கேட்க இருக்கின்ற தொலைக்காட்சி அன்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்குகின்றேன்.
இந்த தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையில் உள்ள அனைத்திந்திய அண்ணா தி.மு.க.ழகக் கூட்டணிக்கும், தி.மு.க கூட்டணிக்கும் இடையே பிரதானப்போட்டியாகும்.
இன்றைய தி.மு.க. அரசின் அவலங்களை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தற்போதைய தி.மு.க. ஆட்சியில் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து பெருகிவிட்டன. அன்றாடம் அரிசி கடத்தலும், மணல் கடத்தலும் நடைபெறுகின்றன. மாணவர் கடத்தலுக்கும் பஞ்சமில்லை. தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்கள், ஆலயச்சொத்துக்கள், ஆளில்லா வீடுகள் ஆகியவை அபகரிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
இன்றைய தி.மு.க. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காய்கறிகள் பன்மடங்கு உயர்ந்து மக்கள் தாங்க முடியாத துன்பக்கடலில் மிதக்கிறார்கள். பதுக்கலையும், கடத்தலையும் தடுக்க இந்த அரசு துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை. முந்தைய தேர்தலில் தி.மு.க. தான் சொன்ன வாக்குறுதிப்படி, ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவில்லை. சிறு வணிகத்தில் அந்நிய பெருவர்த்தக முதலீட்டைத் தடுக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் சீர்குலைந்துவிட்டன.
2001 முதல் 2006 வரை அம்மா தலைமையில் இருந்த அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசு சுமத்தி சென்ற 38 ஆயிரம் கோடி ரூபாய் கடனை சரிசெய்து 3ஆண்டுகால வறட்சி, சுனாமிப் பேரழிவு மற்றும் பெருவெள்ளச் சேதம் ஏற்பட்டதை எல்லாம் சந்தித்து விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தினார் என்பதை வாக்காளப் பெருமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரை மின்வெட்டுக்கொடுமை தொடர்கிறது. மின்நிலையங்களை பராமரிக்காததும், புதிய மின் உற்பத்தி செய்யாததும், மின்திருட்டை தடுக்காததும், நாடு முழுவதும் நடத்திய ஆடம்பர விழாக்களும் இந்த கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் இந்த தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுவிட்டன. சென்னைச் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும், உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மற்றும் நீதிபதி தாக்கப்பட்டதும், சென்னை மாணவர் கடத்தலில் ஏற்பட்ட நிகழ்வுகளும் இதற்கு சாட்சியங்கள். இந்த அரசு சட்டத்தின் ஆட்சியா நடத்துகிறது?
நிதிநீர்ப் பிரச்சனையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக காவிரி நீர்ப்பிரச்சனை மற்றும் பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு தவறிவிட்டது.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு அதனால் இதுநாள் வரை சுமார் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்ததற்கு மூலகாரணம் நமக்கு சொந்தமான கச்சத்தீவை,1974 ல் இலங்கைக்கு தாரைவார்த்ததேயாகும். இதற்கு அன்றைய தி.மு.க. அரசு உடந்தையாக இருந்தது. மீனவர்களின் துன்பத்தை நிரந்தரமாக துடைக்கும் நோக்கத்தில் நமக்கு சொந்தமான கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளவர் அம்மா அவர்களே ஆவார். ஈழத்தமிழர்கள் அந்நாட்டு மக்களுடன் சம உரிமை பெற்று வாழ வகை செய்யவேண்டும் என்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க அனைத்திந்திய அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதில் மத்திய அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆவார். அவர் கொள்கைபரப்பு செயலாளராக இருக்கிறார். இந்த கட்சியின் பொதுக்குழுவில் அவருக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த பெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களே அமைத்துக் கொள்வதாகும். துப்பாக்கி தோட்டாவை விட ஓட்டுச்சீட்டே வலிமையானது, இவ்வாறு எடுத்துச்சொன்னவர் அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆவார். தந்தை பெரியாரின் தளபதியான பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறினார்கள்.
விஷம்போல் ஏறிவிட்ட விலைவாசியைக் கட்டுப்படுத்த, மின்வெட்டை அகற்றிட, தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப்பூங்காவாக மாற்றிட அனைத்து தரப்பு மக்களுக்கும் சமதர்ம நீதி வழங்கிட, தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை வென்றெடுத்திட, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி மக்கள் ஆட்சி மலர்ந்திட அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக வேட்பாளர்களுக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் கண்ட வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகளின் சின்னத்திலும் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்து அம்மா அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்குங்கள். இந்த வெற்றி மக்களின் வெற்றியாகும். இவ்வாறு முத்துமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.