முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிக்காவல் படை அமைக்க வேண்டும்-தா.பாண்டியன்

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

கரூர். ஏப்.- 8 - திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தனிக்காவல்படை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். நேற்று மதியம் கரூர் வந்த தா.பாண்டியனை பேருந்து நிலையம் அருகில் அதிமுக மாவட்ட செயலாளரும் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. இந்திய கம்யூனிஸ்ட் கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி அதை தடுக்க யாராலும் முடுயாது. தேர்தலில் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிக்க திமுக, காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகள் மூலமாகவும் பணம் கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க தயக்கம்காட்டி வருகிறது. தேர்தலில் திமுகவின் பணம் கொடுப்பதை தடுக்க நம் கட்சி இளைஞர்களை கொண்ட காவல்படை செயல்பட வேண்டும். 

இந்த படைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் கொடுக்கும் பணத்தை தடுப்பதோடு பலரை பிடித்தும் கொடுத்துள்ளனர். என்னதான் திமுகவின் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்தாலும் திமுக கூட்டணி தோல்வி உறுதியாகிவிட்டது.  மக்களின் ஆதரவு அதிமுக கூட்டணிக்கு அதிகரித்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரோதிகளை பார்ப்பதுபோல் பார்க்கின்றனர். ராகுல்காந்தியை இந்திராகாந்தியின் வாரிசு என பார்க்கதான் மக்கள் வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அகலும்வரையில் விலைவாசி குறையப்போவதில்லை தமிழக மக்கள் வாழ்க்கை இருண்ட சூழ்நிலையில்தான் உள்ளது. இவற்றை தடுக்க ஒரே வழி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமே என்றார்.

இந்த பேட்டியின்போது பி.கே.முருகேசன், உடையவர் மோகன், சி.பி.ஐ.நகர செயலாளர் நேதாஜி, அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்