முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் ராணுவ வளாகத்தில் சக்திவாயந்த குண்டு வெடித்தது

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

இம்பால், செப்.- 26 - மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ராணுவ வளாகம் ஒன்றில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் எம். செக்டார் என்ற பகுதியில் ராணுவ அலுவலக வளாகம் ஒன்று உள்ளது. இந்த ராணுவ வளாகத்திற்கு அருகில் தான் மணிப்பூர் கவர்னர் மாளிகையும் இருக்கிறது. மேலும் இதே பகுதியில் ஜான்ஸ்டன் மேல் நிலை பள்ளியும் இருக்கிறது. இந்த ராணுவ வளாகத்தில் நேற்று அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த வளாகத்தில் குண்டு வெடித்தது எப்படி என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடி குண்டு சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பயங்கர சத்தம் எழும் அளவுக்கு இந்த குண்டு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். வெடி குண்டு வெடித்த இடத்தை நேரில் பார்த்து செய்தி மற்றும் புகைப்படம் சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வெடி குண்டு வெடித்த இடத்திற்கு தீ அணைப்பு படையினர் விரைந்து சென்று அங்கு ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்