முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டியில் விநாயகர்சிலை ஊர்வலம் வாடிப்பட்டி

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

செப், - 26 -மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஸ்ரீவிநாயகர் பக்தர் பேரவை சார்பாக 18வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சென்ட்ரல் வங்கி தலைமை மேலாளர் நடராஜன், தொழிலதிபர் சீனிவாசன், கிரட் செயலாளர் அழகேசன், வக்கீல்கள் செல்வக்குமார், முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஆட்டோ கண்ணன் வரவேற்றார். இந்த ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தொடக்கிவைத்தார். இதில் சென்ட்ரல் வங்கி பணியாளர் மகாலிங்கம், எம்.ஆர்.ராஜா, மாரியப்பன், தேனி சலீம், சண்முகவேல், சென்னகிருஷ்ணன், கலைவாணன், பாண்டி, கண்ணன், ஆறுமுகம், ராமு, பழனிச்சாமி, முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, தனிப்பிரிவு பாண்டி, ஏட்டுகள் சகாயராஜ், பாபு, பெரியகருப்பன் ஆகியோர் செய்திருந்தனர். பூஜைகளை பூசாரிகள் ஜெயராமன், வீரபத்திரன் ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாட்டினை பேரவை பொறுப்பாளர் எஸ்.எஸ்.குருசாமி செய்திருந்தார். இந்த ஊர்வலம் தாதம்பட்டி, நீரேத்தான், போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, பொட்டுலுப்பட்டி, பேட்டைபுதுர், மேட்டுப்பெருமாள் நகர் வழியாக இரட்டைபிள்ளையர் கோவிலை வந்தடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்