முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க தலைவராக கட்காரி 2 வது முறையாக தேர்வு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சூரஜ்கண்ட், செப். - 27 - நிதின் கட்காரி இரண்டாவது முறையாக பா.ஜ.க தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டம் அரியானா மாநிலத்தில் உள்ள சூரஜ்கண்ட் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பா.ஜ.க தலைவராக நிதின் கட்காரியை இரண்டாவது முறையாக தேர்வு செய்ய உள்ளனர். ஒரு நபர் 2 முறை கட்சி தலைவர் பொறுப்பை வகிக்கும் வகையில் பா.ஜ.க கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அக்கட்சி ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. கட்காரியின் பதவி வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதையடுத்து அவரை இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்க கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்தில் கட்காரி இரண்டாவது முறையாக பா.ஜ.க தலைவராவதற்கு ஒப்புதல் வழங்கப்படும். கட்காரி வரும் 2015ம் ஆண்டு வரை தலைவர் பொறுப்பில் இருப்பார். தற்போதுள்ள பா.ஜ.க சட்டப்பட்டி ஒருவர் ஒரு முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்காரியை மீண்டும் தலைவராக்குவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முனைப்பாக உள்ளதாக என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்