முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வஞ்சத்தின் மொத்த உருவம் கருணாநிதிதான் திருத்துறைப்ண்டியில்-விஜயகாந்த்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருத்துறைப்ண்டி. ஏப்.- 7 - நாட்டைப்பற்றியும், நாட்டு மக்களை பற்றியுமே கவலைப்பட்டு வாழ்ந்த ஜீவா எங்கே? தன் குடும்பம், தன்வீடு பற்றியுமே கவலைப்பட்டு வாழும் கருணாநிதி 20 வயது வித்தியாசம் உள்ளவர் ஜீவா எனது நண்பர் என்று கூறுவது எப்படிப்பட்ட பொய் என்பதை மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பேசினார். திருத்துறைப்ண்டி தனித்தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் உலகநாதனை ஆதரித்து வாக்கு கேட்டு காமராஜர் சிலை அருகே நடிகர் விஜயகாந்த் பேசியதாவது:-

இத்தொகுதியில் போட்டியிடும் உலகநாதனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றிப்பெற செய்யுங்கள் என்று கூறியவர் கதிர்அரிவாள் சுத்தியல் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறி உடனே சன் டி.வி, கலைஞர் டிவியில் வேட்பாளருடைய சின்னம் கூட தெரியாமல் விஜயகாந்த் பேசுகிறார் என்று போடுவார்கள். விஜயகாந்த்  ஒருத்தன்தான் பேசி வருகிறான் அவனை அழிக்க வேண்டுமென்று கூறுகிறார். காசு கொடுக்காமல் சன்டிவி, கலைஞர் டிவியில் விளம்பரம் கொடுக்கின்றீர்கள். நல்லதே செய்யுங்கள் வஞ்சகத்தின் மொத்தம் உருவம் என்று கூறினால் அது கருணாநிதிதான்.

ஜீவாவை எனது நண்பர் என்று கூறும் கருணாநிதி எம்.ஜி.ஆர். பேருந்து போக்குவத்து கழகத்தை ஆரம்பித்தது எம்.ஜி.ஆர்.தான். ஜீவா நாட்டுக்காக உழைத்தார். தினத்தோறும் மக்கள் மக்கள், நாடு நாடு என்று தன்னை இந்த நாட்டிற்காக தியாகம் செய்து வாழ்ந்தவர்தான் ஜீவா. ஒருமுறை ஜீவாவை அழைத்துக்கொண்டு காமராஜர் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு போக சென்றபோது உள்ள இருந்தபடியே ஜீவா இதோ வருகிறேன் வருகிறேன் என்று கூறினார். என்ன என்று கேட்டதற்கு வேட்டியும், சட்டையும் காயட்டும் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு கண்ணீர் விட்டார் காமராஜர்.

ஜீவாவிற்கு இருந்த சொத்து 2 வேட்டியும், 2 சட்டையும்தான். இந்திய மக்களுக்கு உழைத்தவர். பல ஆண்டுகாலம் சிறையில் வாழ்ந்தவர். அப்படிபட்ட தியாகத்தின் உருவத்தை கேவலமாக வாழ்ந்து  கொண்டிருக்கின்ற கருணாநிதி அவரை நண்பர் என்று கூறுவதை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கருணாநிதிக்கு வீடா, அல்லத நாடா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

அன்று 1946ல் திருவாரூர் நகர கூட்டுறவு வங்கியில் மெம்பராக ஆவதற்கு இருந்த வெங்கல பாத்திரம் உட்பட 1000 ரூபாய்தான் எனது சொத்து என்று கூறிய கருணாநிதிக்கு இன்று 5 கோடி சொத்து என்றும், தயாளு அம்மாவிற்கு 40 கோடி என்றும் கூறுகிறார். கருணாநிதியாவது கதை வசனம் எழுதினால் 5 கோடி உள்ளது. தயாளு என்ன வேலை பார்த்தார். 40 கோடி கணக்கு காட்டுவதற்கு. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதலமைச்சராக வருவார். உங்களுடைய தேவைகளை ர்த்தி செய்வார். 

உங்களுடைய தேவைகளைர்த்தி செய்வார். நீங்கள் உலகநாதனை ஆதரிக்க வேண்டும். 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறினாரே கருணாநிதி கொடுத்தாரா? இல்லையே இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பெயரில் 3 ஆயிரம் ஏக்கல் நிலம் எப்படி வந்தது. இதனை சிந்தித்து பாருங்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இறந்ததற்கு வேதனைப்படுவதாக சோனியா சென்னை கூட்டத்தில் தெரிவித்தார்.  மத்திய மாநில அரசிகளின் ரோந்து படை என்ன செய்கிறது. 5 ஆண்டுகாலமாக எதையுமே கவனிக்காத இந்த அசு தேவைதானா? கேபிள் டிவி மூலமாக சன் டிவிக்கு 1 மாதம் ஒன்றுக்கு 450 கோடி ரூபாயும், 5 ஆண்டுகளில் 2 டிவிக்கும் 50 ஆயிரம் கோடி ரூபாயும் இழக்கபோவதால் ஒன்றுக்கு ஓன்று மாறிமாறி செய்திகள் வெளியிடுகின்றனர். சேர்ந்தே இருப்பது கருணாநிதியும், களவாணித்தனமும், சேராதிருப்பது கருணாநிதியும், உண்மையும் சேரவே சேராது. இந்தநிலை தெரிந்ததால்தான் அரிச்சந்திரன் அன்றே இறந்துவிட்டான். அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படம் வந்தது. 40 திருடர்கள் கொள்ளையடித்த பணத்தை அலிபாபா மக்களுக்காக வழங்கினார். ஆனால் இன்று கருணாநிதியும், 400 திருடர்களும் என்ற நிலைதான் உள்ளது. தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து கருணாநிதியிடம் கொடுக்கின்றார்கள். அதுவே நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை தூக்கி எறிந்து மக்கள் நலனுக்காக உழைக்கக்கூடிய உலகநாதனை வெற்றிப்பெற செய்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று விஜயகாந்த் பேசினார்.

கூட்டத்தில் வேட்பாளர் உலகநாதன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக மாவட்ட செயலாளர் மகா முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ஜமால், அதிமுக ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், நகர செயலாளர் சண்முகசுந்தர் உள்பட ஏராளமானோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago