முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆணைய உத்தரவை ரத்து செய்ய பிரதமர் மறுப்பு

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,11 - காவிரி ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கர்நாடக மாநில தலைவர்களின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் மறுத்துவிட்டார். கர்நாடக அரசானது, அணைகளில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு தமிழகத்திற்கு திறந்துவிட மறுத்துவிட்டது. இதனையொட்டி காவரி ஆணைய கூட்டத்தை கூட்டக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, காவிரி ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு உத்தரவிட்டது. அதனையொட்டி காவரி ஆணைய கூட்டம் கடந்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதலில் காவரி ஆணைய உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையொட்டி கர்நாடக அரசானது வேண்டாம் வெறுப்பாக காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்துவிட்டது. மறுபக்கத்தில் விவசாயிகள் மற்றும் இதர கன்னட அமைப்புகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த செய்தது. அதோடுமட்டுமல்லாது கர்நாடக மாநில தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவரி ஆணைய உத்தரவை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜூனா, கே.எச். முனியப்பா, பாரதிய ஜனதா தலைவர்கள், 16 எம்.பி.க்கள் ஆகியோர் பிரதமரை சந்தித்து காவிரி ஆணைய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரினர். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். இதனையடுத்து கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், டெல்லியில் 3 நாட்கள் முகாமிட்டு பிரதமரை நேரில் சந்திக்க முயன்றார். இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. 

இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை மீண்டும் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, மல்லிகார்ஜூனா, கே.எச்.முனியப்பா, வெங்கையாநாயுடு தலைமையில் பா.ஜ.எம்.பி.க்கள் 16 பேர் நேற்று சந்தித்து காவிரி ஆணைய உத்தரவை ரத்து செய்யும்படி கோரினர். அவர்களின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டார். காவிரி ஆணையமானது ஒரு இயக்கம் அல்ல. அந்த ஆணையமானது புதுவை, கேரள, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநில முதல்வர்கள், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர்களை உள்ளடக்கியது. காவரி ஆணைய உத்தரவை வாபஸ் பெற முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது பிரதமரின் உத்தரவு அல்ல. காவரி ஆணையத்தின் உத்தரவாகும். உத்தரவை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் காவிரி ஆணையம் மீண்டும் கூட வேண்டும் என்று கர்நாடக மாநில தலைவர்களிடம் பிரதமர் தெரிவித்துவிட்டதாக சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறினார். இரண்டு மாநிலங்களின் நலன்களையும் பிரதமர் கருத்தில் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago