முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மீனவர்கள் 33 பேரை கைது செய்தது பாகிஸ்தான்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாபாத், அக். 14 - பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, இந்திய மீனவர்கள் 33 பேரை, பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கடற்படையினர், இந்திய மீனவர்களை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்திய, பாகிஸ்தான் கடல் எல்லையில் நேற்று முன்தினம் இந்திய மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், 33 இந்திய மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் மீது, பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, நேற்று பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்