முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு திரும்பும் திட்டத்தை கைவிட்டார் முஷாரப்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஏப்.12 - பாகிஸ்தானுக்கு திரும்பும் திட்டத்தை அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைவிட்டு விட்டார் என்று தெரியவந்துள்ளது. அதிபர் பதவியை துறந்த பின்னர் லண்டனில் தற்போது வசித்து வரும் முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பி அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டதாக அந்நாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. லண்டனில் இருந்தவாறு புதிய கட்சி ஒன்றையும் தொடங்கிய முஷாரப், பாகிஸ்தானுக்கு திரும்பி அகில பாகிஸ்தான் முஸ்லீம் கட்சிக்கு தலைமையேற்பதாக அடிக்கடி அறிவித்தும் வந்தார். ஆனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ராணுவம் மறுத்துள்ளது என்று முஷாரப்பின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்