முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் தலைவர் தலையை கொண்டுவந்தால் ரூ.5 கோடி..!

புதன்கிழமை, 17 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,அக்.18  - தெஹ்ரிக்-தலிபான் என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவன் என்று கருதப்படும் முல்லா புத்ருல்லாவை கொன்று அவனது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் தெஹ்ரிக்-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கமானது பாகிஸ்தானில் குண்டுவெடிக்காத நாளில்லை. மேலும் கடந்த பல நாட்களுக்கு முன்பு இளம் சமூக சேவகரான மலாலா யுசுப்ஜாய் என்பவரை தாக்கியது. இந்த சம்பவத்தையொட்டி தெஹ்ரிக் தலிபான் தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் பகுதியான மாலகந்த் சுவாத் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்ததும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் பிரிவு தலைவன் முல்லா, ஆப்கானிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான். அமெரிக்காவுக்கு எதிரான இந்த சதித்திட்டத்தை ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்