முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 3 பேர் பலி

வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

ஸ்ரீநகர், அக். 18 - காஷ்மீர் எல்லையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள லம்பார்டர் கிராமத்தில் பாகிஸ்தானில் இருந்து அந்த நாட்டு வீரர்கள் ராக்கெட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த முகமது ஷபி, லியாகத் அகமது, ஷகீனா அக்தர் ஆகியோர் இறந்தனர். எல்லை பகுதியில் இந்திய ராணுவ தரப்பில் சோதனை சாவடி கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் இருந்து கடந்த சில நாட்களாக அந்த நாட்டு வீரர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்