முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சிக் கோயில் தக்கார் முதல்வருடன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவை மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தக்கார்  கருமுத்து தி.கண்ணன் நேற்று (18.10.2012) தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். 

இந்தச் சந்திப்பின்போது, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் பழமை வாய்ந்த  கொடிமரத்திற்குப் பதிலாக புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீnullண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்து, திருக்கோயில் இருப்பில் உள்ள 16 கிலோ தங்கத்தை பயன்படுத்தி புதிய கொடிமரம் அமைக்க அனுமதி வழங்குமாறு  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையினை ஏற்று, புதியதாக தங்கத் தகடுகள் பதித்த கொடிமரத்தினை அமைக்க  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்