முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை நீக்கியதில் மன வருத்தம் இல்லை: நித்யானந்தா

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, அக்.21  - மதுரை இளைய ஆதீனப் பொறுப்பிலுருந்து என்னை நீக்கியதால் எனக்கு எந்க மன வருத்தமும் இல்லை என்று நித்யானந்தா நிருபர்களிடம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த  நிக்யானந்தா நிருபர்களிடம் கூறியதாவது

மதுரை இளைய ஆதீனப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிட்டனர் என்ற தகவல் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். இதனால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை.

இரண்டொரு நாளில் நானே விலகிவிடலாம் என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இது நானாக தேடிச் சென்ற பதவி இல்லை.ஆதீனமே கொடுத்த பொறுப்பு.என்னால் ஏதும் சங்கடம்ஏற்படுமானால் நானே விலகிவிடுகிறேன் என்று ஆதீனத்திடம் நான் ஏற்கெனவே தெரிவித்கிருந்தேன். 

நான் கையெழுத்திட்டால் விலதல். அவர் கையெழுத்திட்டால்   நீக்கம். இது வெறும் நடைமுறைதான். பதவி நீக்கத்தால் எனக்கு எவ்வித பொருளாதார இழப்பும் இல்லை,

மதுரை ஆதீனம் பொலீஸில் புகார் கொடுத்துள்ளாரா என்று எனக்குத் தெரியாது.

என்னால் அவருக்கு எந்த பாதிப்பும், சங்கடமும் இருக்காது என்பது மட்டும் உறுதி .நான் எனது பயணக்தை தொடர்ந்துகொண்டே  இருப்பேன் என்றார் நித்யானந்தா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்