முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.ஊராட்சி தலைவி அ.தி.மு.க.வில் இணைந்தார்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,ஏப்.12 - மேலூர் கொட்டாம்பட்டி , பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவி வள்ளிமயில் முருகேசன், தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் அருணசலம் மகன் புகழேந்தி மற்றும் தி.மு.க. பிரதிநிதிகள் தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மேலூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுன் இணைத்து கொண்டார். இதே போல் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தி.மு.க. தலைவி அன்னபுரணி பெரியசாமி மற்றும் மேற்பட்டோர் தங்களை மேலூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.  இதுபோல் தேர்தல் தேதி அறிவித்தபோது தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்து விலகி 2000-க்கும் மேற்பட்டோர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்று அனைவரும் உறுதி அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்