முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு 400 சிறப்பு பஸ்கள்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, அக். 26 - பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு 400 சிறப்பு பஸ்களை கேரள அரசு இயக்குகிறது. மண்டல பூஜை மற்றும் மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 16 ம் தேதி முதல் சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. நீண்ட தூர பயணத்துக்கு 300 பஸ்களும், குறுகிய தூர பயணத்திற்கு 100 பஸ்களும் என மொத்தம் 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

திருவனந்தபுரம், கோட்டயம், கொட்டாரகரா, செங்கலூர், எரிமேலி, குமுளி ஆகிய கேரள பகுதிகளில் இருந்தும் சென்னை, செங்கோட்டை, பழனி, பெங்களூர் ஆகிய வெளி மாநில இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக கேரள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்