முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டணத்தை உயர்த்த யோசிக்கமாட்டோம்: பன்சால்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, அக்.- 30 - அவசியம் ஏற்பட்டால் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும் என்று புதிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் வசம் இருந்து வந்த ரயில்வே துறை தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. புதிய ரயில்வே அமைச்சராக பவன்குமார் பன்சால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால், தேவை எனில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கவலைப்பட மாட்டோம் என்றார். அப்படியான ஒரு கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் பொதுமக்களும் அதை ஏற்றுக் கொள்வர் என்று கூறிய பன்சால், கட்டணத்தை உயர்த்தும் போது சேவைகளையும் அதிகரிப்போம் என்றார். மேலும் ரயில்வே துறை எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை நன்கு அறிந்திருக்கிறேன் என்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்