முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் மனைவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு தர்மஅடி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், அக். - 31 - திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்தார். இதனால் கோபமடைந்த சுனந்தா, அந்த நபரின் கன்னத்தில் அறை விட்டார். மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராகி உள்ள சசி தரூர், பதவி ஏற்ற பின்னர் அமைச்சராக, தனது மனைவி சுனந்தாதவுடன் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு வந்தார். இருவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் சசிதரூருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். அவரது மனைவி சுனந்தா புஷ்கரை சுற்றியும் ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சுனந்தா புஷ்கரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனந்தாபுஷ்கர் அந்த வாலிபரை பிடித்து கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சுனந்தாவை பத்திரமாக அனுப்பிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்