முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேக விழா

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

உசிலம்பட்டி, அக்.- 31 - உசிலம்பட்டி அருகேயுள்ள ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேக விழாவும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. உசிலம்பட்டி வட்டாரத்திலேயே பெரிய துவார பாலகர்கள் சிலை இக்கோவிலில்தான் உள்ளன. ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதி மக்கள் ஆனையூரில் உள்ள ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் பூஜை செய்து வழிபட்டனர். இக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஐராவதீஸ்வரர் திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர். 25 கிலோ அரிசியில் தயிர் சாதம் தயாரித்து அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்