முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் நக்சலைட்டுகள் - ராமன்சிங்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப். 13 - ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது நக்சலைட்டு தீவிரவாதம் தான் என்று சத்தீஷ்கார் முதல்வர் ராமன்சிங் கூறியுள்ளார். இந்த தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் ராமன்சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனநாயகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மாவோயிஸ்ட், நக்சலைட்டு தீவிரவாதிகள்தான் என்றார். ஜனநாயகம் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் இந்த நக்சலைட்டுகளின் வன்முறையை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் கொள்கையில் தனது அரசு தீவிரமாக இருக்கிறது என்றும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்க தொடர்ந்து கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நக்ஸலைட்டு தீவிரவாதிகளைஒடுக்க சத்தீஷ்கர் மாநில அரசும், மக்களும் ஒன்றுதிரண்டு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்