முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் சேதங்களுக்கு மத்தியில் புகைப்படமெடுத்த மாடல்..!

சனிக்கிழமை, 3 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், நவ. 3 - பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகி நானா கோவியா, சாண்டி புயலால் சீரழிந்து போன நியூயார்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்காவே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரை கிண்டலடிக்கிறார்களாம்.

விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் நிறையப் பேர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம்.

30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர். சாண்டி புயலால் சேதமடைந்து போயுள்ள நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விசிட் அடித்த அவர் அங்கு காணப்பட்ட சேதங்களுக்கு மத்தியில் விதம் விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார்.

சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், மலிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர். அவரைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அருகே நானா நிற்பது போலவும், உலகின் பல்வேறு அசம்பாவித சம்பவங்களைப் பார்த்து நானா ரசிப்பது போலவும் அவரது படத்தைப் போட்டுள்ளனராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்