முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம்..!

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

அம்பத்தூர். நவ.4 - செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சம்பளம் போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் ஈடுப்பட்டனர். சமீபத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்த போது  அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு செய்தியாளரை தே.மு.தி.க எம்.எல்.ஏ. அனகை முருகேசன் தாக்கினார். இதையெட்டி தே.மு.தி.க எம்.எல்.ஏ அனகை முருகேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் அவர் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கண்டித்தும், அவர் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நேற்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகம் முன்பு சட்டபேரவை எதிர் கட்சி தலைவர் விஜயகாந்திற்கு சம்பளம் அளிக்கும் போராட்டத்தை பத்திரிக்கையாளர்கள் நடத்தினர்.

இதில் திரளான பத்திரிக்கையாளர்கள்  மற்றும் புகைப்படக்கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு விஜயகாந்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்