முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காங்கிரஸ் பேரணி பிரதமர், சோனியா பங்கேற்பு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 5 - மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி நேற்று பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்த பேரணியில் காங்கிரஸ் முதல்வர்கள், காங்கிரஸ் மாநில தலைவர்கள். வட்டார, ஒன்றிய தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரள்கின்றனர். பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நியாயப்படுத்தி உரையாற்றினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியையே ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரூ. 1,600 கோடி மோசடி புகார் மூலம் பீதியூட்டி வரும் நிலையில் இந்த பேரணி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்