எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 6 - தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் இன்றைய தினம் பொன் எழுத்தில் பொறித்த நாளாகும். ஒரே நாளில் இதற்கு முன்னர் தமிழக அரசு 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒருபோதும் செய்ததில்லை. ஹூண்டாய் மோட்டார்ஸ், நோக்கியா, செயின்ட் கோபைன், மற்றும் சன்மினா எஸ்.இ.ஐ. இது தவிர மிகப்பெரிய நிறுவனங்களான சுந்தரம் கிளேடன் லிட், டியூப் இன்ஸ்வெஸ்ட்மெண்ட் ஆப் இந்தியா, ஹர்ஷா குரூப் நிறுவனங்கள், ஹம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் லிட்., ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூபாய் 20, 925 கோடிகளாகும். இதனால் 36,855 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும். 2012, மே 14-ந் தேதி அன்று தமிழக அரசு டைம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிக்கில்ஸ் பிரைவேட் லிட்., இந்தியா யமஹா மோட்டார் லிட்., அசோக் லேலேண்ட்- நிசான் மோட்டார் கம்பெனி லிட்., எய்ச்சர் மோட்டார்ஸ் லிட்., மற்றும் பிலிப்ஸ் கார்பன் லிட்., ஆகிய 5 திட்டங்களுக்கு ரூபாய் 5,700 கோடி முதலீட்டில் 9,500 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விடுதலைக்கு பிந்தைய சகாப்தத்தில் தமிழ்நாடு என் தலைமையின் கீழ் 1992 ஆம் ஆண்டு தொழிற்கொள்கையை வெளியிட்டு மாநிலத்தின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. போர்டு மற்றும் ஹூண்டாய் போன்ற மாபெரும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்த்து ஆட்டோமொபைல் தொழிலில் புரட்சியை ஏற்படுத்த அந்த கொள்கை காரணமாக அமைந்துள்ளது. 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கிடையில் என்னுடைய முந்தைய அரசு மேற்கொண்ட ஆரம்ப நடவடிக்கைகளினால் இன்றைய தினம் சென்னை உலக ஆட்டோ மையமாக திகழ்கிறது. துரதிருஷ்டவசமாக 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் வேறு அரசு மாநிலத்தை ஆண்டதினால் இந்த ஒப்பந்தத்திற்கு பொருந்தவில்லை. 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கிடையே என்னுடைய அரசு தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்கு சிறப்பான தொழில் துறை மேம்பாட்டையும், தொழிலுக்கு உகந்த சூழ்நிலையையும் ஏற்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தது. என்னுடைய அரசு பல சிறப்பான அம்சங்களை கொண்ட 2003-ல் தொலை தூர பார்வையுடன் தொழில் கொள்கையை உருவாக்கியது. நோக்கியா, போக்ஸ் கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் மற்றும் பல நிறுவனங்களை ஈர்த்து தமிழ்நாட்டில் மின்னணு புரட்சி ஏற்பட அந்த கொள்கை வழிவகுத்தது. நோக்கியாவின் திட்டம் உலகிலேயே கையடக்க தொலைபேசி தயாரிப்பில் முதன்மையாக உள்ளது. இன்றைய தினம் இந்தியா ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் தலைமையாக சென்னை உள்ளது.
இந்த வெற்றி 1992 மற்றும் 2003-ல் என்னுடைய அரசு அறிமுகப்படுத்திய என்னுடைய தலைமையின் கீழ் வெளியிட்ட தொழில் கொள்கைக்கு கிடைத்ததாகும். தமிழக அரசின் 2012-ன் தொழிற்கொள்கை விரைவில் வெளிவர உள்ளது. மாநிலத்தின் போட்டியிடும் வலிமையை நாம் கட்டமைத்ததின் காரணமாக 2001- 2006 காலகட்டத்தில் தமிழகம் முதலீட்டுக்கு சாதகமான விரும்பும் மையமாக மாறியது. வசதியான மின்சக்தி சூழ்நிலை, சிறந்த நிதி பராமரிப்பு ஏற்பட்ட திறமையான கூட்டுச் சூழ்நிலை ஆகியவற்றால் தமிழகம் உச்சநிலையில் உள்ள வெற்றியாளராக திகழ்கிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பின்படி 2001 செப்டம்பரிலிருந்து 2004 மார்ச் வரையில் தமிழகம் உற்பத்தித்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் தன்னிரகற்ற மாநிலமாக விளங்கியது. பைனான்ஸ் குரூப்பின் எப்.டி.ஐ.களஞ்சியம் நடத்திய 2005- 2006 ஆசிய பிரதேச எதிர்காலம் என்று தலைப்பிட்ட கணக்கெடுப்பின் தமிழ்நாடு வெற்றி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மிகச்சிறந்த குறிப்பிடத்தக்க சாதனை பெற்ற மாநிலம் என்ற பெயரை பெறும் வகையில் மற்ற மாநில அரசுகள், பிரதேச அரசுகள், ஆசிய நாடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு இந்த வகையில் புறம் தள்ளியது. 2011, மே மாதம் என்னுடைய அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றபோது, தொடர் மின் பற்றாக்குறையினால் நெருக்கடியான நிதிநிலையுடன் கூடிய சூழ்நிலையை முந்தைய அரசு விட்டுச் சென்றதை நான் சந்திக்க நேர்ந்தது. இத்தகைய சவால்கள் நம்முடைய போட்டியிடும் வலிமையை குறைத்து பல நிறுவனங்கள் அச்சத்துடன் விலக வைத்தது. வறுமையை அகற்ற லாபகரமான வேலைவாய்ப்பு சூழ்நிலைகளை அரிய தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டிய மறுசீரமைப்பு போராட்டத்திற்கு நான் உறுதி கொண்டேன். தன்னிரகற்ற மாநிலம் என்ற சூழ்நிலையை மீண்டும் பெற எனக்கு நானே தயார்படுத்திக் கொண்டேன்.
முதலீட்டாளர்கள் விருப்பு வெறுப்புகளுக்கிடையில் ஒரு மாறுபட்ட நிலையை உலகம் பதற்றத்துடன் எதிர்நோக்கியது. உடனடி மற்றும் நடுத்தரத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் ஈடுபட இந்த சூழ்நிலை ஊக்கப்படுத்தியது. நீண்ட கால திட்டங்களுக்கு மந்தம் ஏற்பட்டது. இதில் ஊக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தமிழக அரசு முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டியதானது. வறுமையற்ற சிறந்த வளமும், முன்னேற்றமும் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறவும், நவீன சமுதாயத்தின் அடிப்படை சேவைகளை மக்கள் அனுபவிக்கும் வகையிலும், மனதுக்கு இதமான ஈடுபாட்டுடன் வாழக்கூடிய சூழ்நிலையில் உலகின் மற்ற பகுதிகளுக்கு நிகரான 2023 தொலைநோக்கு திட்டத்தை நான் வெளியிட்டேன். 2023 தொலைநோக்கு திட்டத்தில் எதிர்பார்க்கும் தேசிய ஒட்டுமொத்த வளர்ச்சியான 11 சதவீதத்தை விட ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியை நான் திட்டமிட்டுள்ளேன். அந்த காலகட்டத்தில், அடுத்த 11 ஆண்டுகளில் 15 சதவீத மக்கள் தொகை வளர்ச்சிக்கிடையே தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகரிக்கும். அதாவது 2010-11-ல் 1628 அமெரிக்க டாலராக 73278 ரூபாயாகவும், 2023-ல் 10,000 அமெரிக்க டாலராகவும், 4,50,000 ரூபாயாக இருக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சிறந்த ஆதாரங்களை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு வறுமையற்ற மாநிலமாக மாறும். 2023 தொலைநோக்கு திட்டம் 10 உத்திகளை கொண்ட வளர்ச்சி வியூகத்தை உருவாக்கும். தகுதியான வணிகத்தை நடத்துவதற்கு சரியான சூழ்நிலையை அளிப்பதை சார்ந்தே முதலீட்டை ஈர்ப்பது அமையும். மின்சக்தி, தண்ணீர், இணைப்பு தொடர்பு, துறைமுக வசதிகள் ஆகிய அவசிய கட்டமைப்புகள் கிடைக்கும்போதுதான் முதலீடுகளை ஈர்க்க முடியும். தமிழ்நாடு 11 சதவீத பொருளாதார வளர்ச்சியையும், 14 சதவீத உற்பத்தித் துறை வளர்ச்சியையும் எதிர்நோக்கியுள்ளது. அற்பபுத்தி உள்ளவர்கள் என்னுடைய திட்டங்களை கண்மூடித்தனமாக துரதிருஷ்டவசமாக குறை சொல்கிறார்கள். ஆனால் பெரிய மனம் படைத்தவர்கள் அதற்கு மேலும் பாராட்டுகிறார்கள். உலகில் 3 வகையான மக்கள் உள்ளனர். முடியும் என்பவர்கள் , முடியாது என்பவர்கள், முடியவே முடியாது என்பவர்கள். முதலாமானவர்கள் ஒவ்வொன்றையும் அடைகிறார்கள். முடியாது என்பவர்கள் எதிர்க்கிறார்கள். முடியவே முடியாது என்பவர்கள் தோற்றுப் போகிறார்கள். இன்றைய நமது சந்தேகங்கள் நாளை நனவாக்கும் குறிக்கோளாக மாறும். தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஆகியவற்றின் மத்திய அரசு வெளியீடு புள்ளி விவரங்கள் 2012-ல் வெளியிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு 40,1,537 கோடி ரூபாய் முதலீட்டையும், 2011-ல் 3,33,001 கோடி ரூபாய் உற்பத்தித்துறை முதலீட்டையும் ஈர்த்துள்ளது. 2011 முதல் 2012 வரையில் 34 மாதங்களில் தமிழ்நாடு 68,527 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது. என்னுடைய அரசு தமிழகத்தை உயர் வளர்ச்சி வட்டத்தில் இடம் பெற செய்யவும், நடுத்தர வருமான நாடுகளான வளர்ச்சியால் தாய்லாந்து, தென்கொரியா ஆகியவற்றை விட மேம்பட்ட மாநிலமாகவும் மாற்ற குறிக்கோள் கொண்டுள்ளது. உற்பத்தி துறையில் 1,00,000 கோடி முதலீட்டை ஈர்த்து இதுவரை இல்லாத சாதனையை பதிவு செய்ய எண்ணி உள்ளது. எல்லா வகையான மேம்பாடுகளிலும் தமிழ்நாட்டை நிகரற்ற மாநிலமாக்க நான் உறுதி கொண்டுள்ளேன். என்னுடைய அரசு எல்லா மட்டங்களில் தரமான நிர்வாகத்தை வழங்கி வளர்ச்சிக்கும், போட்டிக்குமான தடைகளை அகற்ற உறுதி கொண்டுள்ளது. தற்போது தமிழ்நாடு கோருகின்ற முதலீடு மற்றும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு புதிய வழிகளை காண தமிழ்நாடு மேற்கொள்ளும் முயற்சியில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிட்., இந்தோ ராமா குரூப் நிறுவனங்கள், ஏடிடி தொழிற்பூங்கா, பிஜிஆர் எனர்ஜி குரூப் நிறுவனங்கள், ஹர்ஷா குரூப் ஆப் கம்பெனிகள், ஜெயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா லிட்., டான்பாஸ் இன்டஸ்ட்ரீஸ் பி.லிட்., நோக்கியா பி.லிட்., சன்மினா எஸ்இஐ இந்தியா பி.லிட்., டியூப் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா, ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பி.லிட்.. மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை இந்த தருணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவுக்கு அழைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டு ஒப்பந்தங்களில் நம்முடைய பங்குதாரர்கள் அனைவரும் கொள்கை ரீதியாக வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.