முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமனார் மறைவு: முதல்வர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 6 - நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமனார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமனார் அழகுபாண்டி தேவரின் மறைவையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-​ தங்களின் மாமனார் அழகுபாண்டி தேவர் நேற்று (5.11.2012) காலை திடீரென இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அழகுபாண்டி தேவரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்