முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பாசேத்தி எஸ்.ஐ கொலைவழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேர்கைது

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை நவ. - 6 - கடந்த 27ந் தேதி சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் குற்றவாளியை பிடிக்கச்சென்ற திருப்பசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின்சுதன் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையாளியை கண்டுபிடிக்க டி.எஸ்.பி மங்களேஸ்வரன் தலைமையில் 10 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 7 பேரை ஏற்கனவேகைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் வடிவேல்(16), சீமைச்சாமி மகன் சிங்கமுத்து(17), சுப்பிரமணி மகன் முத்துப்பாண்டி(16), சுப்பிரமணியன் மகன் ராஜகுரு(19), செல்லப்பாண்டி மகன் ஜோதிபாசு(17), விஸ்வநாதன் மகன் விஜய்(17) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வண்ணாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சக்திவேல்(22), அரியலூர் மாவட்டம் நாகபந்தலை சேர்ந்த கொலஞ்சி மகன் மதியழகன்(25) ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மானாமதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களில் 5 மாணவர்கள் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றொரு மாணவரும் அடைக்கலம் அளித்த 2 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலையாளியான பிரபுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிரபு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்