எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 7 - விவசாயிகளின் விளைபொருளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவும் ஏதுவாக 30.36 கோடி ரூபாய் செலவில் 20 கிடங்களில் ஊரக சேமிப்பு இடங்குகளைக் கட்டவும், 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் 20 குளிர்பதன கிடங்குகளை அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழவுத்தொழிலை மேற்கொண்டுள்ளவர்கள் உலகத்தில் வாழும் அனைவருக்கும் உணவு அளித்து காப் பதால், உழுபவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் வள்ளுவர் பெருந்தகை. அத்தகைய உழவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வழி செய்யும் வகையிலும், பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. வேளாண் துறையில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்குதல், நுண்ணீர் பாசனத்திற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாய விளை பொருட்களை சேமிக்க, கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைத்தல், அதிக அளவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்குதல், உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளின் நலனுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீnullண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள் விளை பொருட்களை விற்று விடுகின்றனர். இதன் காரணமாக, தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விலை வீழ்ச்சியின் போது பொருட்களை பாதுகாத்து, பின்னர் விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வது விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்பதையும், அறுவடைக் காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தி இல்லாததால் விலை ஏற்றமும் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதையும், கருத்தில் கொண்டு, எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான சேமிப்புக் கிடங்குகளை கூடுதலாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை பாதுகாப்பாக இருப்பில் வைத்து, அவற்றிற்கு நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வகையிலும், உழைப்பின் பலன் உழவர்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய 50 கிடங்குகளை 82 கோடி ரூபாய் செலவில் அமைக்க சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதே போன்று, இந்த ஆண்டு 18 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 50 குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை 37 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு மேலும், 20 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 20 குளிர்ப்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை 30 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 நவீன சேமிப்புக் கிடங்குகள், ஒவ்வொன்றும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை விற்பனைக் குழுவின் செங்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கடலூர் விற்பனைக் குழுவின் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு விற்பனைக் குழுவின் கருமாண்டி செல்லிப்பாளையம் மற்றும் வேப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேலூர் விற்பனைக் குழுவின் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருச்சி விற்பனைக் குழுவின் துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் பொங்கலூர், பல்லடம் மற்றும் தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விழுப்புரம் விற்பனைக் குழுவின் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தர்மபுரி விற்பனைக் குழுவின் அரூர் மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ராமநாதபுரம் விற்பனைக் குழுவின் ஆர்.எஸ்.மங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருநெல்வேலி விற்பனைக் குழுவின் அம்பாசமுத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தேனி விற்பனைக் குழுவின் போடிநாயக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தர்மபுரி விற்பனைக் குழுவின் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சேலம் விற்பனைக் குழுவின் ஆத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய 20 இடங்களில் ஊரக சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் 20 குளிர்ப்பதன கிடங்குகள், கிடங்கு ஒன்றிற்கு 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதத்தில் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் பல்லடம், பெள்ளாச்சி மற்றும் வடக்கிப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், சேலம் விற்பனைக் குழுவின் மேச்சேரி மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், தர்மபுரி விற்பனைக் குழுவின் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருவண்ணாமலை விற்பனைக் குழுவின் செய்யார், சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு விற்பனைக் குழுவின் வெள்ளக்கோயில் மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருநெல்வேலி விற்பனைக் குழுவின் அம்பாசமுத்திரம், புத்தூர், சாத்தான்குளம் மற்றும் கழுகுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விழுப்புரம் விற்பனைக் குழுவின் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருச்சி விற்பனைக் குழுவின் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடலூர் விற்பனைக் குழுவின் விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய 20 இடங்களில் குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவசாயத்தில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக அளவில் தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண்மை பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு வேளாண்மை பட்டயப் படிப்பினை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் இந்த ஆண்டு முதல் தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிச் சுமை, அதிகரிக்கும் போக்குவரத்து செலவினங்கள் போன்றவற்றால் ஏற்படும் நிதிச் சுமையின் காரணமாக சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழிவகை முன்பணமாக என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலைக்கு 17 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும், திருத்தணி சர்க்கரை ஆலைக்கு 14 கோடியே 29 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 6 கோடியே 48 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 38 கோடியே 13 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்