முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: மோடிக்கு நெருக்கமான அதிகாரிகள் டிரான்ஸ்பர்

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத், நவ.- 7 - குஜராத் மாநில சட்டசபை சேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள், 4 மாவட்ட கலெக்டர்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்திருத்திறது.பனஸ்கார் மாவட்ட கலெக்டராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்னரசனை தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. குஜராத் தலைநகர் ஆமதாபாத் கிரைம் பிரிவு அதிகாரிகளான ஏ.கே.சர்மா மற்றும் ஹிமான்ஷா ஆகியோர் மோடியின் வலதுகரமாக செயல்படுபவர்கள் என்று நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசிகளை ரகசியமாக டேப் செய்வதில் இவர்களுக்கு பங்கிருப்பது என்பதும் குற்றச்சாட்டு.தற்போது இவர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் ஜாம்நகர் எஸ்.பி.படேல், பதான் எஸ்.பி. பரதா சூரத் காவல் துறை அதிகாரி சோலங்கி ஆகியோர் மீதும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல்,டஹோட், பனஸ்கந்தா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பனஸ்கந்தாவுக்கு தென்னரசன் என்ற தமிழ் ஐஏஎஸ் அதிகாரியை கலெக்டராக தேர்தல் ஆணையம் நியமிக்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்